tamilnadu

img

ராப் பாடகி மீது தேசத்துரோக வழக்கு

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநி லம் கான்பூரில் பிறந்தவர் ஹர்த் கவுர். ராப் பாடகி யான இவர் தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘கிளேசி’, ‘மூவ் யுவர்பாடி’ போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முற்போக் கான கருத்துக்களைப் பதிவிடும் இவர், அண்மையில், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்ஆகி யோரின் மதவெறி நட
வடிக்கைகளையும் விமர்சித்திருந்தார்.இதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ (தேசத்துரேகம்) மற்றும் 153ஏ, 500 உள்ளிட்ட பிரிவுகளில் வாரணாசி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;